உள்நாட்டு செய்திகள்புதியவை

மின்சாரசபைக்கான எரிபொருள் விநியோகம் தடைபடும்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மின்சாரசபைக்கு எரிப்பொருளை விநியோகிக்காதிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கனியவள தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முகத்துவாரம் – மாவத்தை பகுதியில் புதிய எரிபொருள் குழாய் மார்க்கத்தை உருவாக்கும் பணிகளின்போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமைக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவே காரணம் எனவும் கூறியுள்ளது.

குறித்த குழாய் மார்க்கமானது முகத்துவாரம் ஊடாக செல்கின்ற நிலையில் அங்கு வசிப்பவர்கள் அதற்கு தடையை ஏற்படுத்துகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையாயின் அவரது அமைச்சின் கீழ் இயங்கும் மின்சாரசபைக்கு எரிப்பொருளை விநியோக முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க