உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

4 மாவட்டங்களுக்கு கடுமையான வெப்பம்

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று கடுமையான வெப்பநிலையை சந்திக்கும் என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள மக்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று திணைக்களம் கூறியுள்ளது.

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வானிலை திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, போதுமான நீர் குடிக்க வேண்டும், நிழலில் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும் என்று வானிலை ஆய்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க