உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற உறுப்பினரின் மகனால் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்!

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவின் மூத்த மகனால் தாக்கப்பட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரே தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க