உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு 10ஆம் திகதி கூடுகிறது – தயாசிறிக்கும் அழைப்பு

நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் சாட்சி வழங்க முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அன்றைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அவர் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க