இலங்கைமுக்கிய செய்திகள்

மொறட்டுவையில் ஒருவர் சுட்டுக்ககொலை! சுற்றுவளைக்கப்பட்ட மொறட்டுவ லுனாவயில்

மொறட்டுவை – லுனாவயில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவுத்துள்ளார்.

நேற்று இரவு 12.25 கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அங்குலான பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர், திடீர் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியபோது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் அலுவலர்களை பிரதேச மக்கள் சுற்றிவளைத்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து, பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க