உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மரண தண்டனை கைதிகளின் விபரம் வெளியானது

போதைப்பொருள் வழக்கு விசாரணைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

20 பேர் அடங்கிய குறித்த பட்டியலில் 8 முஸ்லிம்கள், 8 தமிழர்கள், மற்றும் 04 சிங்களவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில்  சிங்களவர்கள் இருவரும் தமிழர் ஒருவருக்கும் மற்றும் முஸ்லிம் ஒருவருக்கும் முதற்கட்டமாக மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த பட்டியலில் எம்.கே.பியதிலக்க, எம்.தர்மகரன், எம்.எஸ்.எம்.மஸ்தார், ஜே.ஏ.பூட், பி.ஜே.போல்சிம், எஸ்.புண்ணியமூர்த்தி, கே.எம்.சமிந்த, எஸ்.கணேசன், டபிள்யு.விநாயகமூர்த்தி, எஸ்.ஏ.சுரேஷ்குமார், எம்.குமார், எஸ்.மசார், டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா, எஸ்.முஹம்மது ஜோன், ஆர்.பி.சுனில் கருணாரத்ன, சையித் முகமது உவைஸ், எம்.எஸ்.எம்.மிஸ்வர், பி கமிலஸ் பிள்ளை, ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல் பெருமாள் கணேசன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த வாரத்தில் மரண தண்டனைகள் எதுவும் நிறைவேற்றப்படாதென சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க