உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

திருகோணமலையில் வெளிவிவகார அமைச்சின் நடமாடும் சேவை

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து மேற்கொண்ட நடமாடும் சேவை இன்று திருகோணமலையில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாறப்பனவின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா, விவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பணிப்பாளர் நாயகம் யு.எல்.முஹமட் ஜௌஹர், பணிப்பாளர்களான திருமதி நிலாந்தினி அருள்பிரகாசம், யு.எல்.நியாஸ், வெளிவிவகார அமைச்சின் யாழ் பிராந்திய கொன்சியூலர் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி தனிஸ்கா வசந்தராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளைசேர்ந்தவர்ளும் அதனை அண்மித்த வவுனியா, மன்னார் போன்ற பிரதேச வாழ் மக்களும் பயன்பெற்றனர்.

கருத்து தெரிவிக்க