உள்நாட்டு செய்திகள்புதியவை

புதையல் தோண்டிய நான்கு பேர் கைது

பொலன்னறுவை அரலகன்வில பகுதியில் நேற்று சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சித்த நிலையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 முதல் 31 வயது வரையிலான சந்தேக நபர்கள் சில உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் திருகோணமலை, பசறை அரலகன்வில, எல்ல வேவா ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கருத்து தெரிவிக்க