உள்நாட்டு செய்திகள்புதியவை

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் யாகம்!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சிறந்த முடிவு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் யாகம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தேடிவந்த பிள்ளையார் ஆலயத்தில் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் இந்த யாகம் இடம்பெற்றது.

சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சாம்பஸ்ரீ ஐயப்பதாசக்குருக்கள் இந்த விஷேட யாகத்தை நடத்தினார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி முன்னெடுக்கப்பட்ட இந்த யாகத்தில் வவுனியா அந்தணர் ஒன்றியம் குருக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க