உள்நாட்டு செய்திகள்புதியவை

அனைத்து இன மக்களும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்: நீதிமன்றம் உத்தரவு

வென்னப்புவ – தங்கொட்டுவை வாராந்தச் சந்தையில், அனைத்து இன மக்களும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமென மாரவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வாராந்தச் சந்தையில், முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என பிரதேச சபைத் தலைவரால் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க