உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நான்கு தமிழக மீனவர்கள் கைது – விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஊர்காவற்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்படையினர் இவர்களை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்து, யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட கடல் மார்க்கமான சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்துள்ளப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர்களை யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க