உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

போதைக்கு எதிராக வவுனியாவில் அணி திரள்வு

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதையற்ற தேசம் என்ற நிகழ்வு இன்று காலை குருமண்காட்டு சந்தியில் இடம்பெற்றுள்ளது.

ஒரு வாரகாலமாக போதைக்கு எதிரான நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீனிவாசன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம். கனீபா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களும் பறக்கவிடப்பட்டுள்ளது.

மேலும், போதைக்கு எதிரான வாசகங்கள் எழுப்பட்ட பதாகைகளை தாங்கிவாறு கவனயீர்ப்பு ஊர்வலமும் இடம்பெற்றிருந்தது.

குருமன்காட்டுச்சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் வவுனியா சமூக சேவைகள் திணைக்களம் வரை சென்று முடிவடைந்துள்ளது.

இதன்போது வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்களும், செட்டிகுளம் பிரதேச செயலளார், பாடசாலை அதிபர்கள், சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க