உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி 15 தொழிலாளர்கள் பாதிப்பு

தலவாக்கலை – சென்.கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் இன்று முற்பகல் 10 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 15 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை செடியில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளவி கொட்டுக்கு இலக்கான 15 பேரும் பெண் தொழிலாளர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க