உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கொட்டகலையில் தேசிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

தேசிய உணவு நுகர்வின் ஊடாக ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கும் பொருட்டு கொட்டகலையில் தேசிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மலையக பிரதேசத்தை சார்ந்த மக்களுக்கும் கொழும்பிலிருந்து அட்டன் வழியாக நுவரெலியா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும் குறித்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாகாண விவசாய அமைச்சின் 50 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் குறித்த விற்பனை நிலையம் கொட்டகலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத், இ.தொ.காவின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க