உள்நாட்டு செய்திகள்புதியவை

திருகோணமலை கடற்பகுதியில் 5 மீனவர்கள் கைது

திருகோணமலை – புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கடற்படையினரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

புல்மோட்டை – கொக்கிளாய் ஏரியில் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 02 டிங்கி படகுகள், 02 இஞ்ஜின்கள், 05 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க