உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன்: தயாசிறி ஜெயசேகர

நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை தான் ஆஜராகப் போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு முன்னிலையில், தாக்குதல் தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான நடவடிக்கையினால் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் செயல் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க