உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

புரோட்லேன்ட் மின்சார நிலையத்திற்கு சென்ற கனரக வாகனம் விபத்து

கொழும்பு துறைமுகத்திலிருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

புரோட்லேன்ட் மின்சார நிலையத்திற்கு 25 டொண் நிறையுடைய இரும்பு மற்றும் உபகரணங்களை ஏற்றி சென்ற பொழுது கினிகத்தேனை களுகொல்ல பகுதியில் பிரதான வீதியில் குடை சாய்ந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக பொல்பிட்டிய, மினுவாந்தென, அங்ராபிட்டிய, லக்ஸபான – நோட்டன்பிரிட்ஜ் ஊடாக மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெக்கோ இயந்திரத்தினை பயன்படுத்தி கனரக வாகனத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க