உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு: பயணிகள் பெரும் அவலம்

ரயில்வே பணியாளர்களின் பணிபுறக்கணிப்பினால் இன்றும் மட்டக்களப்பு ரயில்வே நிலையத்தில் அனைத்து ரயில்வே சேவைகளும் முற்றாக பாதிக்கப்பட்டடிருந்ததுடன் பயணிகளும் பெரும் அவலங்களை எதிர்கொண்டனர்.

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான அனைத்து ரயில்வே சேவைகளும் இடம்பெறவில்லை.காலை மாலை நேர சேவைகள் கடுகதி ரயில் சேவைகளும் இடம்பெறவிலல்லை.

தூர மற்றும் குறுகிய ரயில்வே சேவைகளும் இடம்பெறாமையினால் பயணிகள் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

ரயில்வே நிலையம் வெறிச்சோடிக்காணப்பட்டது. குறித்த பணியாளர்களின் வேலைநிறுத்ததினால் பயணிகள் எதிர்ப்பினையும் வெளியிட்டனர்.

கருத்து தெரிவிக்க