உள்நாட்டு செய்திகள்புதியவை

வென்னப்பு பிரதேச சபைத் தலைவரை கடுமையாக விமர்சித்துள்ள கரு ஜெயசூரிய

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் எடுத்த நடவடிக்கையை சபாநாயகர் கரு ஜெயசூரிய கடுமையாக விமர்சித்துள்ளார்.

தங்கொட்டுவ வாரச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதித்தது. இது குறித்து சபாநாயகர் விமர்சித்துள்ளார்.

நாட்டின் சட்டத்தை மதிக்க மக்கள் அரசியல் வாதிகளை தெரிவு செய்வதாகவும் ஆனால் அரசியல் வாதிகள் அவ்வாறு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் குறித்த விடயத்தில் பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டையும் வெளியிட்டுள்ளார்.

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரின் செயல் அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறல் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க