உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த உந்துருளி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்தில் 27 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க