உள்நாட்டு செய்திகள்புதியவை

திட்டமிட்டபடி ரெயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது!

ரெயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமையின் காரணமாக அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரெயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமது வேண்டுகோள்கள் நிறைவேறும் வரை வாராந்தம் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அந்த தொழிற்சங்கங்கள் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்படி, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க கடந்த வாரம் தீரமானிக்கப்பட்டதாக ரெயில்வே தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை ரெயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்யும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க