உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

21/4 தாக்குதலுடன் ரிஷாட்டுக்கு தொடர்பா? இன்று சாட்சியம்!

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு இன்று (28) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சாட்சியமளிக்கவுள்ளார்.

தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றுமுன்தினம் (26) ரிஷாட் பதியுதீன் ஆஜராகியிருந்தார்.

எனினும், தெரிவுக்குழு உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே அவரிடம் இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

21/4 தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளுடன் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பிருப்பதாகவும், தாக்குதல் திட்டத்துக்கு சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

கருத்து தெரிவிக்க