வெளிநாட்டு செய்திகள்

ஜப்பான் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

ஜப்பானின் ஒஷாகாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் சின்ஷோ அபே வை சந்தித்து உரையாடியுள்ளார்.

மோடியுடன்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்ற இந்தியாவின் உயரதிகாரிகளும் , ஜப்பானின் பிரதமர் சின்ஷோ அபே ,  மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகளும்  இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பயங்கரவாதம் , பாதுகாப்பு , வர்த்தகம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து  கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் ” எனது இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். ” என ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க