உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுஜன பெரமுனவின் அறிக்கையை ஆராய விசேட குழு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பொதுஜன பெரமுன சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஆறாவது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்த தங்கள் திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கொண்ட எட்டு பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இந்த குழுவில் நிமல் சிரிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அலகியவன்ன, ரெஜினோல்ட் குரே, பைசர் முஸ்தபா, தயாசிறி ஜெயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க