உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கை வந்த மூவர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வருகை தந்த இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 24, 27, 34 வயதுடையவர்களே மீன்பிடி படகு ஒன்றின் மூலம் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க