உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வத்தளை விபத்து-இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது

வத்தளையில் நேற்று ஏற்பட்ட விபத்து தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஒரு காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வத்தளை ஒலியமுல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த நபர் பொலிஸ் வாகனத்தின் கதவு திறந்து வைக்கப்பட்ட நிலையில் அதில் மோதுண்டு  இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க