உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் சட்டத்தை மீறி மண் அகழ்வு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும், அனுமதிப்பத்திர விதி முறைகளை மீறி அகழ்வு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பகுதிக்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நீர்பாசன பொறியியலாளர் இருவரும் நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் அனுமத்திப்பத்திர விதி முறைகளை மீறி மண் அகழ்வு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

உடனடியாக குறித்த பகுதியில் கிரவல் மண் அகழ்வு செய்வதற்கான அனுமதியை இரத்துச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளரிடம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க