உள்நாட்டு செய்திகள்புதியவை

யட்டியந்தோட்டையில் பேருந்து விபத்து :28 பேர் காயம்

யட்டியந்தோட்டை பெலம்பிட்டி பிரதான வீதியின் வீ ஓய தோட்டப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்து சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலம்பிட்டியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க