உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

புதையல் தோண்ட முயற்சி செய்த பெண்ணொருவர் உட்பட 14 பேர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்ட முயற்சி செய்த பெண்ணொருவர் உட்பட 14 பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அந்த பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, தம்புள்ள, மாத்தளை, சாவகச்சேரி,கலேவெல போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் மூன்று ஸ்கேனர் கமரா உள்ளடங்கலாக பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க