உள்நாட்டு செய்திகள்புதியவை

மரணதண்டனை ஒருபோதும் தீர்வாகாது-தொழிலதிபர் சர் ரிச்சர்ட் பிரான்சன்

பிரித்தானிய தொழிலதிபர் சர் ரிச்சர்ட் பிரான்சன், நான்கு தசாப்த காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தொடர்ந்தும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

4 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அறிக்கையில் கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

இதேவேளை மரணதண்டனை பேரழிவு தரக்கூடியது மற்றும் ஒருபோதும் தீர்வாகாது” என்று சர் ரிச்சர்ட் பிரான்சன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர் ரிச்சர்ட் சார்லஸ் நிக்கலஸ் பிரான்சன் பிரித்தானியாவின் மிகப்பெரும் செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க