உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நாகராஜன் கருணாகரனுக்கு கலாநிதிப்பட்டம்

கண்டி மஹய்யாவை தர்மசேனா மாவத்தையைச் சேர்ந்த சமூகசேவையாளர் நாகராஜன் கருணாகரனுக்கு
‘குலோபல் பீஸ் யுனிவர்சிட்டி’ (பூலோக சமாதான பல்கலைக்கழகம்) சமூகசேவைக்கான கலாநிதிப்பட்டத்தை வழங்கியுள்ளது.

யூ.எஸ்.ஏ. யில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி நிறுவனம் இவருக்கான மேற்படி கௌரவவிருதை அண்மையில் யாழ்பாணத்தில் வைத்து கையளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்லஸ்தேவானந்தா உட்பட பலர் அவ்வைபவத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சமூகசேவையாளரான கருனாகரன் அகில இலங்கை சமாதான நீதவானாக இருப்பதுடன் தேசாபிமாணி,
தேசமாண்ய, தேசபந்து, லங்கா புத்ர மற்றும் ஸ்ரீலங்கா வியாபார விபூசன போன்ற விருதுகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க