உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘ பாக்கியசோதி சரவணமுத்துவின் குடியுரிமையை பறிக்கவும்’

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை கைதுசெய்யுமாறுகோரி  பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுசெய்த மாற்று கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவின் குடியுரிமையை பறிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணி மற்றும் கடும்போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளாலுமே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த முறைப்பாட்டை பாக்கியசோதி சரவணமுத்து உடனடியாக மீள பெறாவிட்டால் நாட்டு மக்களை ஓரணியில் திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று சி.பி. ரத்னாயக்க எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அதுவும் பௌத்த மக்களின் உணர்வுகளுடன் விளையாடும் இப்படியான ‘ அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்கவேண்டும் என்று பௌத்த பிக்குகளின் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க