உள்நாட்டு செய்திகள்புதியவை

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்ட வழக்கு – விசாரணைகள் இறுதி கட்டம்

கொழும்பில் கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தொடர்பான விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று புதன்கிழமை கோட்டை நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரான ‘நேவி சம்பத்’ என அறியப்படும் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சிக்கு ஜூலை 03 திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க