உள்நாட்டு செய்திகள்புதியவை

பொலிஸார் மீதான முறைப்பாடுகளை இணையத்தளம் வழியே வழங்க நடவடிக்கை

பொலிஸார் மீதான முறைப்பாடுகளை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலமாக எழுத்து மூலமாகவும், குரல் மூலமாகவும் காணொளிகள் மூலமாகவும் முறைப்பாடுகள் அளிக்க முடியும் என பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் பொலிஸார் மேற்கொள்ளும் தவறுகளை தொலைபேசியில் பதிவு செய்து முறைப்பாடு அளிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க