உள்நாட்டு செய்திகள்

குருநாகல் வைத்தியர் ஷாபி அடிப்படை உரிமை மனு தாக்கல்

கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அடிப்படை உரிமை மனு ஒன்றை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

வைத்தியர் ஷாபியின் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோமானது என உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து மோசடி குற்றசாட்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் கருத்தடை மேற்கொண்டமை தொடர்பில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க