உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

முன்னாள் பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஏறாவூர் பிரதேச செயலாளராக செயற்பட்ட சதக்கத்துல்லாஹ் ஹில்மிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் மூன்று மாத சிறைத்தண்டனையும்,  இவரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் மகனுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடும் வழங்க நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

பெண்ணொருவரின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சதக்கத்துல்லாஹ் ஹில்மி மீது 2018 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க