உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்புவார நிகழ்வு

போதைப்பொருள் ஒழிப்புவார தேசிய வேலைத்திட்டத்தின் வடமாகாண நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வடமாகாத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், காதர் மஸ்தான், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க