உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

வவுனியா பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா சந்தைக்குச் சென்ற விவசாயி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.30மணியளவில் பொஹஸ்வெவ பகுதியிலிருந்து வவுனியா நகரிலுள்ள சந்தைக்கு சென்ற 58வயதுடைய டொன்டடி ஆரியவம்ஸ என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் மரக்கறிகளைக் ஏற்றிச் சென்ற குறித்த விவசாயி மீது மாமடுவ வீதியிலுள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பொஹஸ்வாவே பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க