உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கைக்கான பயண எச்சரிக்கை தொடரும்-மகாவோ

இலங்கை அரசு அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துள்ள நிலையில் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தவுள்ளதாக மகாவோ அரசு இன்று அறிவித்துள்ளது.

ஜூன் 22 ஆம் திகதி இலங்கையில் அவசர கால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நாட்டு பிரஜைகளுக்கு முன்னதாக விடுத்த 2 ஆம் நிலை அறிவுறுத்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

மகாவோ நாட்டின் உல்லாசத்துறை நெருக்கடிகள் தொடர்பான அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சென்ற மகாவோ நாட்டு மக்களை அவர்களது பயணம் தொடர்பில் மீறுபரிசீலனை செய்யுமாறும் எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அந்நாடு முன்னதாக அறிவித்திருந்தது.

கருத்து தெரிவிக்க