வெளிநாட்டு செய்திகள்

இந்திய மத்திய வங்கி துணை ஆளுநர் இராஜினாமா

மத்திய வங்கி துணை ஆளுநர் ஆச்சார்யா பதவிக்காலம் முடிவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், பதவி விலகவுள்ளதாக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி அடுத்த ஆண்டு ஜனவரி 23-ஆம் திகதி முடிவடைய உள்ள நிலையில் அடுத்த மாதம் 23-திகதியுடன் பதவி விலகப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி துணை ஆளுனர்களில் ஒருவரான ஆச்சார்யா கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இது, 3 ஆண்டுகால பதவி ஆகும்.

தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூலை 23-ஆம் திகதிக்கு பிறகு துணை ஆளுநர் பொறுப்பை தொடர முடியாத நிலையில் இருப்பதாக ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உரிய அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள் என மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க