உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் கடற்பகுதியில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு!

மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கொண்ட பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன்ன.

கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளன.

வடக்கு மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க