உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா தொற்று !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , அமெரிக்காவையே உலுக்கி கொண்டு இருக்கிறது‌. உலக நாடுகளில் கொரோனா தொற்றால் அதிகளவிலான பாதிப்புகளை எதிர் கொண்டு வரும் நாடு அமெரிக்கா.

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,36,764 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் புதிதாக 252 பேர் பலியாகி உள்ளதால் மொத்தமாக உயிரிழந்தோர் 1, 29,657 ஆக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க