இலங்கை

அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன்! கருணா

அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை காரைதீவில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அலுவலகம் திறப்பும் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு ஒப்பானவர் என்று பேசியிருந்தார். இது தொடர்பில் மேலும் பேசிய கருணா, அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன். ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஒரு இராஜதந்திரி என்றார்.

 

 

 

கருத்து தெரிவிக்க