உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்வணிக செய்திகள்

தேயிலைத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட கண்காட்சி

சர்வதேச வர்த்தக சந்தையில் இலங்கை தேயிலை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை தேயிலைச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் விஷேட தேயிலைக் கண்காட்சி திட்டமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இலங்கை தேயிலைக்கு சர்வதேச வர்த்தக சந்தையில் தொடர்ந்து வரவேற்பு காணப்படுகிறது.

இதனை மேம்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது என பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.

வருடாந்தம் இலங்கைத் தேயிலை ஏற்றுமதி மூலம் 250 கோடி ரூபா வருமானமாகப் பெறப்படுவதாக பெருந்தோட்டத் தொழில்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தேயிலை உற்பத்தி, தற்போது அதிகரித்திருப்பதாகவும் மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க