உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

வவுணதீவு மணற்பிட்டியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புதுமண்டபத்தடியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி தவராசா (வயது 62) என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

புதுமண்டபத்தயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிலுக்கு பெற்றோல் நிரப்பிவிட்டு பிரதான வீதிக்கு செல்கையில் பிரதான வீதியில் வேகமாக வந்த மற்றுமோர் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டதில் குறித்த நபர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க