உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் வவுனியாவில் ஆரம்பம்

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பமானது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் ‘நான் போதையை எதிர்க்கின்றேன்’ என்ற தொனிப்பொருளில் உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிர்ப்புப்பட்டி அணிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தினால் ஜூன் மாதம் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட போதையற்ற தேசம் வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 14 விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற உள்ளன.

இதேவேளை நாளையதினம் போதை ஒழிப்பு வாகனப்பேரணி கிளிநொச்சி நகரை நோக்கிச் செல்லவிருப்பதாகவும் நாளை மறுதினம் போதை ஒழிப்பு எதிர்ப்பு வாசகங்களைத் தாங்கிய 100 பலூன்கள் வானில் பறக்கவிடப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் அனைத்துத் திணைக்கள உத்தியோகத்தினரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க