உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று

முல்லைத்தீவு மாவட்டத்தின் இந்த வருடத்திற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது,

அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சிவமோகன் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, செல்வம் அடைக்கலநாதன் பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வடக்கு மாகாண திணைக்களங்களின் பிரதிநிதிகள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொலிஸார் கடற்படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க