வெளிநாட்டு செய்திகள்

பங்களாதேசத்தில் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு

பங்களாதேசத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகர் சில்ஹெடில் இருந்து தலைநகர் டக்காவிற்கு சென்று கொண்டிருந்த விரைவு தொடரூந்து பாரம்சல் என்ற இடத்தில் வரும் போது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது தொடரூந்தின் 2 பெட்டிகள் , தண்டவாளத்தின் அருகே ஓடிக் கொண்டிருந்த வாய்க்காலில் விழுந்தது. ஒரு பெட்டி தலைகுப்புற விழுந்தது.

இந்த விபத்தில் 5 பிரயாணிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர்களில் 20 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க