உள்நாட்டு செய்திகள்புதியவை

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியரின் விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையின் 10ஆவது சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரை ஜூலை மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட்டுக்கு குறித்த சந்தேக நபரின் பெயரில் மூன்று காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றில் இன்றையதினம் பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க