உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடவில்லை: மஹிந்த

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை வெளியிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவருடன் இருக்கும் கூட்டத்தில், உள்ள ஒரு சிலர் தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்ற கருத்து வெளியிட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும், தன்னை பிரதமராக நியமிக்கவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க